Tuesday, October 15, 2013

ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனை

அபூ ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: பெருநாள் தினத்தில் தொழுகை முடிந்தவுடன் நபியவர்கள் மக்களைப் பார்த்து, ஸதகா செய்யுங்கள் என்று சொல்வார்கள், மக்கள் ஸதகா செய்வார்கள். அன்றைய தினம் பெண்கள்தான் அதிகமாக ஸதகா செய்தார்கள்,  என்றார்கள். முஸ்லிம்-
பெருநாள் தினத்தில் செய்யப்பட வேண்டிய ஒரு சிறந்த அமலை, இந்த ஹதீஸ் குறித்துக் காட்டுகிறது, அதுதான் ஸதகா.
பொதுவாக ஸதகாஎன்ற அமல் காலம், இடம், என்பவை வரையறுக்கப்பட்ட ஒரு இபாதத் அல்ல, மாற்றமாக எல்லா நேரங்களிலும், எல்லாக் காலங்களிலும் செய்யப்பட முடியுமானது. இருப்பினும் பெருநாள் தினத்தில் நபியவர்கள் விஷேடமாக ஸதகாவைக் குறிப்பிட்டிருப்பதானது, அன்றைய தினத்தில் அந்த செயலுக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பதனையே உணர்த்துகிறது. அந்த தனிச்சிறப்பு எதுவாக இருக்கலாம்?
பொதுவாக  பெருநாள் தினம் என்பது எல்லோரும் சந்தோஷமாக இருப்பதற்குரிய ஒரு நாள், இங்கு அந்த சந்தோஷம் ஒவ்வொரு மனிதனது உள்ளத்திலும் வெளிப்பட வேண்டும். அதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக அமைந்துவிடக்கூடாது. சுவையான உணவு, அழகா ஆடைகள், உறவுகளின் தரிசனம், லாக்களும் விழாக்களும் என அந்த சந்தோஷம் வெளிப்படுத்தப்பட முடியும். இந்த சந்தோஷ வெளிப்பாடும் ஒரு வணக்கம். இதுவும் நாம் அல்லாஹ்வுக்கு அடிபணிவதன் ஒரு வடிவம்.
எனவே இந்த சந்தோஷ இபாதத்வசதியில்லை என்ற காரணத்தினால் எவருக்கும் தடைப்பட்டுவிடக் கூடாது. ஒரு சமூகக் கட்டமைப்பின் ஒவ்வொரு தனிமனிதனும் அன்றைய தினம் அந்த சந்தோஷ இபாதத்தில் பங்கெடுக்க வேண்டும், அதற்காக ஒரு சமூகக் கூட்டு ஒத்துழைப்பை நபியவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள், என்பதை ஸீறாவைப் படித்துப் பார்க்கும் எவரும் புரிந்து கொள்வார்கள். மேலே கூறப்பட்ட ஹதீஸ் இந்த கூட்டு ஒத்துழைப்பின் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியையே அடையாளப்படுத்திக் காட்டுகிறது.
இது ஒரு சுன்னா இதனை எமது ஊர் மட்டங்களில் நடைமுறைப்படுத்த முயல்வது நல்ல விளைவுகளைத் தரவல்லது.
அனைவருக்கும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து விடை பெறுகிறேன்.
தகப்பலள்ளாகு மின்னா வமின்கும்

குல்லு ஆமின் வஅன்தும் பிஹய்ர்

No comments:

Post a Comment