இஸ்ரா, மிஃராஜ் தினங்கள் வருகின்ற பொழுதெல்லாம் கண் முன்னே முதன் முதலில் விரிகின்ற காட்சி
எமது மூன்றாவது புனிதத்தளமான மஸ்ஜிதுல் அக்ஸாதான். இன்று யூதர்களின் பிடியில் சிக்கி
அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஹைகல் சுலைமானை இடித்துத்
தள்ளிவிட்டு அதன் மீது முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவைக் கட்டி விட்டார்கள் என்ற ஒரு
வரலாற்றுப் பொய்யின் மீது எழுந்த நியாயங்களை வைத்துக் கொண்டு மஸ்ஜிதுல் அக்ஸாவை இடித்துத்
தள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இமாம் புஹாரி பதிவு
செய்துள்ள இந்த ஹதீஸைப் பாருங்கள். அபூதர் அல் கிபாரி (றழி) அவர்கள் நபியவர்களிடம்
கேட்கிறார்கள். அல்லாஹ்வின் தூதரே, பூமியில் முதன் முதலில் கட்டப்பட்ட பள்ளிவாயல் எது? “அல் மஸ்ஜிதுல் ஹராம்” என்றார்கள். பின்னர் எது? எனக் கேட்டார்கள். “மஸ்ஜிதுல் அக்ஸா” என்றார்கள். இரண்டுக்குமிடையில் எத்தனை வருடங்கள்
வித்தியாசம்? என்று கேட்டார்கள்.
“நாற்பது வருடங்கள்”
என்றார்கள்.
இந்த ஹதீஸின் கருத்துப்படி
கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு, நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா கட்டப்பட்டுள்ளது.
இதில் கஃபதுல்லாஹ்வை முதன் முதலில் கட்டியவர் யார் என்பதில் கருத்து வேற்றுமைகள் உள்ளன.
பொதுவாக இப்றாகீம் (அலை) அவர்கள் அதனைக் கட்டினார்கள் என்பது எமக்குத் தெரிந்த விடயம்.
ஆனால் முதன் முதலில் அவர்தான் கட்டினாரா? இல்லை. அதுபற்றி மூன்று கருத்துக்கள் உள்ளன. ஒன்று மலக்குகள்
கட்டினார்கள். மற்றது ஆதம் (அலை) அவர்கள் கட்டினார்கள். அடுத்தது ஆதம் (அலை) அவர்களின்
பிள்ளைகளில் ஒருவர் கட்டினார்.
பின்னர் நூஹ் (அலை)
அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் கஃபா அழிக்கப்பட்டதாகவும் அந்த இடத்தில்தான்
இப்றாகீம் (அலை) அவர்கள் அதனை மீளக் கட்டியதாகவும் ஒரு வரலாறு சொல்கிறது.
இவற்றை அடிப்படையாக
வைத்துப் பார்க்கும் போது கஃபதுல்லாஹ் கட்டப்பட்டு நாற்பது வருடங்களில் மஸ்ஜிதுல் அக்ஸா
கட்டப்பட்டது எனின், ஹைகல் சுலைமானின்
மீது அது கட்டப்படுவதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதையே இதன்மூலம் புரிந்து கொள்ள
முடிகிறது.
இதுபோன்று இன்னும்
எத்தனையோ பொய்களின் மீது புனிதப் போராட்டம் எனும் பெயரில் யூதர்களின் அராஜகம் பலஸ்தீனத்தின்
மீது அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அங்கு அநியாயத்திற்கு எதிராக எழுந்து நின்றிருக்கும்
மனிதர்களுக்காகவும் எமது பிரார்த்தனைகளில் ஒரு பங்கை ஒதுக்குவோம். அல்லாஹ் எம்மை அங்கீகரிப்பானாக.
No comments:
Post a Comment