Sunday, February 3, 2013

வெற்றியின் ரகசியம்


இமாம் ஹஸனுல் பன்னா கூறுகிறார்: மனோவலிமை என்பது, பலவீனம் ஊடறுத்துவிட முடியாத பலமான நாட்டசக்தி, ஏமாற்றும் கலப்படங்களும் அற்ற, கொள்கைமீதான நிலையான விசுவாசம், கஞ்சத்தனங்களும் பேராசைகளும் தடையாக அமையாத, கண்ணியமிக்க தியாகம், கொள்கைத் தவறு, கொள்கைப் பிறழ்வு, கொள்கைச் சமரசம், கொள்கை ஏமாற்று என்பவற்றிலிருந்து காக்கும் வகையிலான கொள்கைப் பிடிப்பும், நம்பிக்கையும், அறிவும் ஆகும்.
(‘நாம் எதனைநோக்கிஅழைக்கிறோம்’, ரஸாஇல்)

எழுந்துகொள்ள நினைக்கும் தனிமனிதர்களானாலும் சமூகங்களானாலும் அதன் தொடக்கப் புள்ளி இதுதான். இதன் மீதான உருவாக்கம்தான் சாதனைகளை நோக்கி வழிநடாத்துகிறது. 

பலமான நாட்டசக்தி, கண்ணியமான தியாகங்கள் செய்யும் தயார் நிலை, கொள்கை விசுவாசம், கொள்கைத் தெளிவு, கொள்கை உறுதி, கொள்கைப் பிடிப்பு ஆகியவற்றைக் கொண்ட மனிதர்கள்தான் இன்றைய உலக சூழ்நிலைக்குத் தேவைப்படுகின்றனர். 

இஸ்லாம் உலகின் தலைமைப்பீடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது. இந்நிலை நிச்சயமா இஸ்லாத்தின் எதிரிகளுக்கு சந்தோஷத்தை அளிக்காது. இஸ்லாத்தின் ந்த முன்னேற்றத்தைத் தடை செய்வதற்கு எதையும் செய்யத் துணிவார்கள். அந்த எதிர்ப்பின் வடிவங்கள் வெறுமனே நேரடியாக இஸ்லாத்தை வேண்டாம் என்று சொல்வதாய் மாத்திரம் அமையமாட்டாது.

மாற்றமாக, இஸ்லாத்தின் பெயரைவைத்துவிட்டு அதன் உள்ளடக்கத்தை வேறு ஒன்றாய் மாற்றியமைப்பதாய்க் காணப்படலாம். அல்லது இஸ்லாமிய வேலைத்திட்டத்தை சுமந்து செல்லும் மனிதர்களைப் பலவீனப்படுத்தும் முயற்சியாய் அமையலாம்.

இத்தகைய சூழ்நிலைகளைத்தான் இமாம் ஹஸனுல் பன்னா அவர்கள், பலவீனம் ஊடறுத்தல், கஞ்சத்தனம், பேராசை, கொள்கை ஏமாற்று, கொள்கைக் கலப்படம், கொள்கைத் தவறு, கொள்கைப் பிறழ்வு, கொள்கைச் சமரசம் போன்ற சொற்களினூடாக அடையாளப்படுத்திக் காட்டினார்கள்.

அன்று காபிர்கள் நபியவர்களிடம் இந்த முயற்சியை செய்தபோது, நபியவர்கள் கொள்கையில் எந்தவிட்டுக் கொடுப்பையும் செய்யவில்லை. உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம்என்ற உறுதியான நிலைப்பாடுதான் அவர்களது பதிலாக அமைந்தது.

அறபுப் புரட்சியின் பின்னர், இஸ்லாத்தை தலைமைப் பீடத்திற்கு எடுத்துவரும் முயற்சியில் ஈடுபடும் இஸ்லாமிய சக்திகளில் மேற்சொன்ன நிதர்சனத்தையே நாங்கள் காண்கிறோம். அவர்கள் உயர்ந்த நாட்டசக்தி கொண்டவர்கள். எந்த முயற்சியும் அவர்களைப் பலவீனப்படுத்தமாட்டாது.

அவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயாரானவர்கள். கஞ்சத்தனங்களும் பேராசைகளும் அங்கு கிடையாது. அவர்கள் தமது கொள்கையில் ஆழ்ந்த தெளிவுடனும், பிடிப்புடனும், நம்பிக்கையுடனும், நிலைமாறாத விசுவாசத்துடனும் காணப்படுகிறார்கள். அங்கு ஏமாற்றில்லை; கலப்படமில்லை; தவறில்லை; பிறழ்வில்லை; சமரசமில்லை. இதனால்தான் அவர்கள் ஜெயிக்கிறார்கள்.எதிர்கொள்ளும் எல்லா சவால்களின்போதும், மிகப் பலமானவர்களாய்த்தான் மீளவும் எழுந்துகொள்கிறார்கள். காரணம் அவர்கள் உலகில் பரீட்சிக்கப்பட்டு வெற்றி காணப்பட்ட ஒரு தர்பிய்யத் முறைமையின் உற்பத்திகள்.

No comments:

Post a Comment