Wednesday, February 6, 2013

சுதந்திரதின சிந்தனை



04.02.2013 இலங்கையின் சுதந்திரதினம், இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் இந்த தினத்தைப் பெருமைக்குரிய ஒரு தினமாக நோக்குகிறான், முஸ்லிம்களும் அதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில் அநியாயம் அடக்குமுறை சுரண்டல் இவற்றை ஒருபோதும் இஸ்லாம் ஆதரிக்கவில்லை.

இந்த நிலைக்குற்பட்ட எந்த மனிதனுக்கும் விடுதலை பெற்றுக் கொடுக்கப்படல் வேண்டும் என்பதே இஸ்லாத்தின் எதிர்பார்ப்பாகும். அங்கு கிடைக்கும் விடுதலை நிச்சயமாக ஒரு மனிதனின் வாழ்வில் மறக்க முடியாத பெருமைக்குரிய நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இங்கு அது போன்ற ஒரு சூழ்நிலையில் இருந்து ஒரு நாடு விடுதலை அடைந்திருக்கிறது என்றால் அதன் குடிமக்கள் அனைவருக்கும் அந்த நாள் என்றைக்கும் மறக்க முடியாத பெருமைக்குரிய நாள்தான்.

அந்த வகையில் மேற்கின் அடக்குமுறையிலிருந்து இலங்கை பெற்ற சுதந்திரம் பெருமைக்குரியது. இந்தப் பெருமித உர்வு தவறானதல்லஅதே நேரம் நாம் இந்தப் பெருமித உணர்வின் மூலம் வேறு எவரையும் தரம் தாழ்த்திவிடக் கூடாது. அதுதான் தவறானது.

Picture by: e media

அடுத்து, தான் பிறந்து வளாந்த மண்ணை நேசிப்பதை இஸ்லாம் தடை செய்யவில்லை இது நாம் எல்லோரும் அறிந்த ஒரு எளிமையான உண்மை. இலங்கை நாம் பிறந்து வளர்ந்த பூமி நிச்சயமாக நாம் இதனை நேசிக்கிறோம். இதனுடைய சந்தோசம் கவலை அனைத்திலும் எங்களுக்கும் பங்கிருக்கிறது.

இதற்கு அநியாயம் இழைக்கப்படும்போது நாம் கவலை கொள்கிறோம்; இது சுரண்டப்படும்போது நாம் கவலை கொள்கிறோம். இது விடுதலை பெறும்போது நாம் சந்தோசம் கொள்கிறோம். இது எமது பூமி; நாம் பிறந்த பூமி; எமது உறவுப்பூமி. எமது மண்ணின் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசமானதுதான். ஆனால், ஒரு விடயம் நாம் சந்தோசம் கொள்வது பிறரை கவலை கொள்ள வைப்பதற்காக அல்ல என்பதை மனம்கொள்ள வேண்டும்.

ஒற்றுமையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. ஒரு நாட்டு மக்கள் தமது ஒற்றுமையை பறைசாட்டும் ஒரு நிகழ்வு இது. அதில் இந்த நாட்டின் குடிமக்களாய் நாங்கள் இணைந்து ஒற்றுமைக்கு இலக்கணம் கூற வேண்டும். ஆனால், எமது ஒற்றுமை என்பது, எமது முன்னேற்றத்திற்கானதேயன்றி எவருக்கும் எதிரானதல்ல என்பதை மனம்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment